Thursday, August 4, 2016

கோழி பண்ணை அமைப்பவர்கள் நோய் தடுப்பை பற்றி கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும் ..


இதை படிபவர்கள் பரப்புங்கள் "share" செய்யுங்கள்..
ரத்த கழிச்சல் நோய்க்கு மருந்து ..
AMPROLIUM 'மருத்துவர் ஆலோசனை படி கொடுக்கவும்'
வெள்ளை கழிச்சல் மருந்து ..
("lasota and rdvk injuction")
மூலிகை மருத்துவம் வெள்ளை கழிச்சல் :
சின்ன சீரகம் 10 கிராம்
கீழாநெல்லி 50 கிராம்
மிளகு 5 கிராம்
மஞ்சள் தூள் 10 கிராம்
வெங்காயம் 5 பல்
பூண்டு 5 பல்
சிகிச்சை முறை (வாய் வழியாக)
சீரகம் மற்றும் மிளகினை இடித்த பின்பு மற்ற பொருள்களோடு கலந்து அரைத்து இக்கலவையை தீவனம் அல்லது அரிசி குருணையில் கலந்து கொடுக்கவும். மிகவும் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிறு சிறு உருண்டைகளாக உட் செலுத்தவேண்டும்.

Thursday, July 28, 2016

அலங்காரக் கோழி வளர்ப்பு

அலங்காரக் கோழி வளர்ப்பு
குறைந்த பராமரிப்பும் அதிக லாபமும் கிடைப்பதால் அலங்காரக் கோழி வளர்ப்பு,
இது ஃபேன்ஸி யுகம். வசதி படைத்தவர்கள் மட்டுமல்ல, அழகியல் ஆர்வமுள்ளவர்களும் அழகுக்காகப் பல்வேறு உயிரினங்களை வளர்க்கிறார்கள். பள்ளிகள், கல்லூரிகள், நகர்ப்புற வீடுகள் என அனைத்து இடங்களிலும் நாய், பூனை, புறா, கிளி, வண்ண மீன்கள் என அழகுக்காக வளர்க்கப்படும் 'ஃபேன்ஸி’ உயிரினங்கள் வரிசையில் சமீப காலமாக அலங்காரக் கோழிகளும் இடம்பிடித்து வருகின்றன. நாட்டுக்கோழியைவிட குறைந்த பராமரிப்பும் அதிக லாபமும் கிடைப்பதால் அலங்காரக் கோழி வளர்ப்பு, புதிய தொழில் வாய்ப்பாக மாறி வருகிறது.
வீட்டு மொட்டை மாடியில் முப்பது ஆண்டுகளாக அலங்காரக் கோழிகளை வளர்த்துவரும் சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த சார்லஸ் காபிரியேல் சொல்வதைக் கேளுங்கள்.
''கோழிகளின் முட்டை இடும் திறன், வளர்ச்சி, உருவ அமைப்பு, குணங்களின் அடிப்படையில் முட்டைக் கோழி, இறைச்சிக் கோழி, சண்டைக் கோழி, அலங்காரக் கோழிகள் என இனம் பிரிக்கிறார்கள். போன்சாய் மரங்களைப் போல சிறிய உருவம், நளினமான நடை, வண்ண வண்ண இறகுகள், கால் நுனியில் அடர்த்தியான ரோமம் ஆகியவை அலங்காரக் கோழிகளின் அடையாளம். இவை பெரும்பாலும் வெளிநாடுகளை தாயகமாகக் கொண்டவை.
10 ஆயிரம் முதலீடு போதும்!
இவற்றை வணிக ரீதியாக வளர்க்க அதிக இடம் தேவையில்லை. வீட்டு மொட்டை மாடியில்கூட வளர்க்கலாம். அதேபோல அதிக எண்ணிக்கையில் கோழிகளை பராமரிக்கவும் தேவையில்லை. சுமார் இருபது கோழிகளை வளர்த்தாலும் லட்சங்களில் வருமானம் பார்க்கலாம். இதை வளர்க்க, 10-க்கு 10 அடி அளவில் வெயில் நேரடியாகத் தாக்காமலும், மழை பெய்யும்போது சாரல் அடிக்காமலும் இருப்பது போல குறைந்த செலவில் கொட்டகை அமைத்துக்கொண்டால் போதும். அலங்காரக் கோழி வளர்ப்புக்கு 10 ஆயிரம் முதலீடு போதுமானது.
ஆயிரம் முதல் லட்சம் வரை!
அலங்காரக் கோழிகளில் அமெரிக்கன் கிரில், பிரம்மா, கொச்சின் பேந்தம், சில்வர் சில்கி, சில்வர் பெசன்ட், போலீஸ் கேப், குட்டைவால் கோழி, ஃபீனிக்ஸ், பேந்தம், பிளாக்மினி கொச்சின், பூட்டேட் பேந்தம், பஞ்சுக்கோழி, டேபிள் ஃபைட்டர், செப்பரேட்டர், மினி வொய்ட் ரோஸ் கேப், கடக்நாத், கிராப் என பலவகையான கோழிகள் இருக்கின்றன. ஒவ்வொரு கோழியும் ஒவ்வொரு விலையில் விற்கப்படுகின்றன. ஒரு கோழி சுமாராக 1,000 ரூபாய்க்கு மேல் விற்பனையாகும். ஒரு சில அபூர்வ ரக வகைக் கோழிகள் ஒரு லட்ச ரூபாய் வரைக்கும்கூட விற்பனையாகின்றன. சில்கி, கடக்நாத் ஆகிய ரக கோழிகளின் இறைச்சி மருந்துப் பொருளாகப் பயன்படுகிறது
20 கோழிகளுடன் தொடங்கலாம்!
முதன் முதலாக இத்தொழிலில் இறங்குபவர்கள் அதிக விற்பனை வாய்ப்புள்ள ரகங்களில் குறைந்த எண்ணிக்கையில் குஞ்சுகளை வாங்கி வளர்க்க வேண்டும். சில்கி, போலீஸ் கேப், கொச்சின், சீ பிரைட் ஆகிய நான்கு ரகங்களுக்கு அதிக விற்பனை வாய்ப்பு உள்ளது. மேற்படி ரகங்களில் தலா 3 பெட்டை, 2 சேவல்களை வாங்க வேண்டும். மொத்தம் 20 கோழிகளுடன் தொழிலைத் தொடங்கி, அனுபவத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட பிறகு அதிக எண்ணிக்கையில் வளர்க்கலாம். ஒரு நாள் வயதுடைய குஞ்சு 300 ரூபாய்க்கும், எட்டு வார வயதான கோழிகள் 800 ரூபாய்க்கும் கிடைக்கும். முதன் முதலில் இந்தத் தொழிலில் இறங்குபவர்கள் எட்டு வார வயதுடைய குஞ்சுகளை வாங்கி வளர்ப்பதுதான் நல்லது. தீவனம் பராமரிப்பு அனைத்தும் நாட்டுக்கோழிக்குச் செய்வது போலவே செய்ய வேண்டும். 25-ம் வாரத்திலிருந்து முட்டை போடத் தொடங்கும். நாட்டுக்கோழிகளைப் போல தினமும் முட்டை கிடைக்காது. இரண்டு நாட்களுக்கு ஒரு முறைதான் முட்டை கிடைக்கும்.
ஒரு வருஷம்... ஒரு லட்சம்!
ஒரு ஆண்டுக்கு சில்கியில் 160 முட்டையும், கொச்சின் கோழி மூலம் 120 முட்டைகளும், போலீஸ் கேப் மூலமாக 100 முட்டைகளும், சீ பிரைட் மூலம் 60 முட்டைகளும் கிடைக்கும். இந்த முட்டைகளை நாட்டுக்கோழி முட்டைகளுடன் அடைவைத்து பொறிக்க வைக்கலாம். அல்லது சிறிய அளவிலான இன்குபேட்டர் மூலமாகப் பொறிக்க செய்யலாம். அடை வைத்ததிலிருந்து 21 நாளில் குஞ்சு பொறிக்கும். இந்த குஞ்சுகளை இரண்டு மாதங்கள் வளர்த்து விற்பனை செய்யலாம். அலங்கார கோழிகள் இடும் முட்டைகளில் சராசரியாக 60 சதவிகிதம் தான் பொறிக்கும். இந்த கணக்குப்படி பார்த்தால், சில்கி முட்டை மூலம் 96 குஞ்சுகள், கொச்சின் மூலமாக 72 குஞ்சுகள், போலீஸ் கேப் மூலம் 60 குஞ்சுகள் மற்றும் சீ பிரைட் மூலம் 36 குஞ்சுகள் என மொத்தம் 264 குஞ்சுகள் கிடைக்கும். இதில் இறப்பு விகிதத்தைக் கழித்தால், ஆண்டுக்கு சராசரியாக 200 குஞ்சுகள் கிடைக்கும். ஒரு குஞ்சு 800 ரூபாய் விலையில் விற்பனை செய்தால் 1.60 லட்ச ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். இதில் ஒரு ஆண்டுக்கான செலவாக அதிகபட்சம் 60 ஆயிரம் ரூபாயைக் கழித்துவிட்டாலும் ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வருமானமாகக் கிடைக்கும்.
விற்பனை வாய்ப்பு!
விற்பனை வாய்ப்பைப் பற்றி கவலையே இல்லை. உங்களிடம் அலங்காரக் கோழிகள் இருப்பது தெரிந்தால் வியாபாரிகளே வந்து வாங்கிக்கொள்வார்கள். அப்படியும் விற்பனை செய்ய முடியாதவர்கள் எங்களிடம் விற்பனை செய்யலாம். எட்டு வார வயதுடைய குஞ்சுகளை 600 ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்வோம்'' என்று முடித்தார் அவர்.
அட, இதுவும் நல்ல பிஸினஸா இருக்கும் போலிருக்கே!
#TkpFarms
#Iniyan
www.nattukozhifarms.in
www.facebook.com/tk.pannai
#nattu kozhi valarpu
#nattukozhivalarputamilnadu


வேலி மசால் பெற

வேலி மசால் பெற
DD—டிடி பெயர் : "programcoordinator kvk namakkal"
மொத்தம் 550 ருபாய் அனுப்புவும் தபால் செலவும் சேர்த்து 550 இக்கு டிடி எடுக்க வேண்டும்
“550” dd “Professionla querior” = இல் அனுப்ப வேண்டும்
To
திட்ட ஒருங்கினைப்பாளர்
வேளான் அறவியல் நிலையம்
கால்நடை மருத்துவ கல்லுரி மற்றும்
ஆராய்ச்சி நிலைய வளாகம்
நாமக்கல் 637002
தொலைபேசி எண்: 04286-266345

From
“உங்களுடைய முழு முகவரி”
மேலும் உங்களுக்கு என்ன விதை வேண்டும்
என்பதை தெளிவாக குறிப்பிட வேண்டும்

தீவனப் பயிர் விதைகள்
விலை மற்றும் கிடைக்கும் இடம்
வேலி மசால் - ரூ . 500 / கிலோ
முயல் மசால் - ரூ. 350 / கிலோ
தட்டைப் பயறு - ரூ. 150 / கிலோ
சூபாபுல் - ரூ. 300 / கிலோ
அகத்தி - ரூ. 500 / கிலோ
Co FS 29 - ரூ. 400 /கிலோ
கினியாப் புல் - ரூ. 1 / கிழங்கு
கோ 4 - ரூ. 0.50 / கரணைகிடைக்கும்
இடம்வேளாண் அறிவியல் மையம்நாமக்கல் - 637 002.தொலைபேசி 04286 - 266 345DD எடுத்து அனுப்பினால் கூரியர் மூலம் விதைகளை அனுப்பி வைக்கிறார்கள்.

#TkpFarms
#Iniyan
www.nattukozhifarms.in
www.facebook.com/tk.pannai
#nattu kozhi valarpu
#nattukozhivalarputamilnadu

நாட்டுக் கோழிகளுக்கு கரையான் தீவனம்..!!

நாட்டுக் கோழிகளுக்கு கரையான் தீவனம்..!!
=================================
கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும்.
கரையான் உற்பத்தி செய்ய தேவையான பொருட்கள்:
-------------------------------------------------------------------------------
1. ஒரு பழைய பானை
2. கிழிந்த கோணி/சாக்கு
3. காய்ந்த சாணம்
4. கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள்
கரையான் உற்பத்தி செய்முறை:
-------------------------------------------------
மேற்கண்டவற்றை பழைய பானையினுள் திணித்து சிறிது நீர் தெளித்து வீட்டிற்கு வெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும். முதல் நாள் மாலை கவிழ்த்து வைத்தால் மறுநாள் காலை திறந்து பார்த்தால் தேவையான கரையான் சேர்ந்திருக்கும். தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள் உடனடியாக எல்லா கரையானையும் தின்று விடும். கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது.
ஒரு பானையில் சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானது. கிடைக்கும் கரையானின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும். செம்மண் பகுதியில் அதிகம் கிடைக்கும். அதிகம் தேவை என்றால் ஒன்றுக்கு மேல் எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம். மக்கள் கரையான் உற்பத்தியை காலங்காலமாக கோழிக்குஞ்சுத் தீவனத்திற்காக செய்தார்கள். இத் தொழில் நுட்பத்தை அறிவியல் நோக்கில் பார்க்கலாம்.
கரையான் செயலாற்றும் முறை:
-------------------------------------------------
இங்கு குறிப்பிடும் கரையான் ஈர மரக்கரையானாகும். (Dandy wood termites) மேலும் கரையான் ஆடு,மாடுகளைப் போல் நார்ப் பொருளை உண்டு வாழும் பூச்சியினமாகும். கரையானின் குடலிலும் நார்ப் பொருள்களைச் செரிக்க நுண்ணுயிரிகள் உண்டு. கரையான் சக்திக்கு நார்ப்பொருளையும், புரதத் தேவைக்கு மரக்கட்டையிலுள்ள பூஞ்சக்காளானையும் பயன்படுத்திக்கொள்கிறது.
பானையிலுள்ள பொருட்களில் நீர் தெளிப்பது கரையான் எளிதில் தாக்க ஏதுவாக அமையும். கரையான்கள் பொதுவாக இரவில் அதிகமாக செயல்படும் என்பதால் மாலையில் பானை கவிழ்க்கப்படுகிறது. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக கரையானை எடுத்து விடுவது சிறந்தது. எறும்புகள் தாக்குதல் உள்ள பகுதியில் பகலில் அலைந்து திரியும் எறும்புகள் கரையானைத் தின்று விடும்.
கரையான் சத்து மிக்கது. அதில் புரதம் 36%, கொழுப்பு 44.4%, மொத்த எரிசக்தி 560கலோரி/ 100கிராம் போன்றவை உள்ளன.
சில வகை கரையானில் வளர்ச்சி ஊக்கி 20% உள்ளது. இதன் காரணமாகவே கோழிக் குஞ்சுகள் விரைந்து வளர்ந்து எடை கூடுகிறது. கோழிக் குஞ்சுகளுக்கு சிறந்த புரதம் செரிந்த தீவனமாக கரையான் அமைந்ததால், காலம் காலமாக தென் தமிழ்நாட்டு மக்களால் கரையான் உற்பத்தி செய்யப்பட்டது. இச்செயல்பாடுகளை ஆய்விட்டபோது பல கூடுதல் நன்மைகள் ஏற்படுவது தெரியவந்தது.
நன்மைகள்:
------------------
கரையான் உற்பத்திக்கு என்று பானை கவிழ்த்தும் போது கரையான்கள் வீடுகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் மரங்களைத் தாக்குவதில்லை. பானையிலிருந்து எழும் ஒரு வகை வாசனை கரையான்களை கவர்ந்து ஈர்க்கும். ஆகவே மற்ற இடங்களைத் தாக்குவதில்லை. பானையில் வைக்கும் நனைந்த பொருட்கள் மற்றும் சாணம் கரையான்களுக்கு மிக பிடித்துள்ளன. கரையானைப் பிடித்து அழிப்பதற்குப் பதில் கோழிக் குஞ்சுக்கு தீவனமாகக் கொடுத்து விடுகிறோம்.
அடுத்து கரையானை ஒழிக்க கடுமையான பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தும்போது சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகிறது அல்லவா?
முடிவாக கரையான் உற்பத்தி என்ற எளிய செலவற்ற ஒரு தொழில் நுட்பத்தால் மூன்று பயன்கள் விளைகின்றன.
1. செலவற்ற கோழிக்குஞ்சு தீவனம்.
2. வீட்டுப் பொருட்கள், மரங்களுக்குப் பாதுகாப்பு.
3. பூச்சிக் கொல்லிக்கு என்று செலவு கிடையாது. பூச்சிக் கொல்லி மருந்து தேவையில்லாததால் நமது சுற்றுப் புறச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது.
இன்றே செயல்படுங்கள், மாலை செயல்பட்டால் மறுநாள் காலை உங்கள் கோழிக் குஞ்சுகளுக்குத் தேவையான கரையான் கிடைத்துவிடும்.

#TkpFarms
#Iniyan
www.nattukozhifarms.in
www.facebook.com/tk.pannai
#nattu kozhi valarpu
#nattukozhivalarputamilnadu

பணம் சம்பாதிக்க. ஆயிரம் வழி உண்டு

வணக்கம் நண்பர்களே:
பணம் சம்பாதிக்க. ஆயிரம் வழி உண்டு.ஆனால் மனஅழூத்தம் இல்லாமல,படிப்பு அறிவு இல்லமா அதிக முதலிடு இல்லமால சம்பாத்தியம் செய்ய சில வழிகள் உள்ளன.அவறு இன்று நாட்டு கோழி பணம் பண்ணுவது எப்படி எண்ணு பார்போம். எடுத்துகாட்டு 1000₹ முதலீடு வைத்து எத்தனை சதவிதம் அதிக ஆக்கம் முடியும் பார்போம்.
விலை நாள் % நாட்டு கோழி முட்டை விலை:10 .(100 முட்டை விலை 1000) 1நா ள
1நாள் நாட்டு குஞ்சு விலை :40.( 90 குஞ்சு விலை 3600. ) 21 நாள்
1மாதம் நாட்டு குஞ்சு விலை 100.(80 குஞ்சு விலை 8000. ) 51நாள்
3 மாதம் நாட்டு குஞ்சு விலை 200.(80 குஞ்சு வி
லை 16000 ) 111 நாள்
6 மாதம் நாட்டு கோழி விலை 300.(80 குஞ்சு விலை 24000 ) 201 நாள்
8 மாதம் நாட்டு சேவல் விலை 700.(40 சேவல் விலை 28000+40 பொட்டை கோழி விலை:(40*2 கிலோ*300 =24000 ) 24000+28000=52000₹ நாள் .261.
30சேவல் விற்பனை மூலம் வருமானம் 30*700=21000.அதை கொண்டு 35 பெட்டை வாங்கி விடவும்.(21000/600=35).ஆக மொத்தம. 10 சேவல் 75 பொட்டை கோழி இருக்கும் 261 நாள்.
12 மாதம
பொட்டை 75*2கிலோ*300₹= 45000
சேவல் 10*700₹= 7000
75 கோழி 4 மாதம 2250 முட்டை இடும். 75கோழி (4:1) 19 முட்டை விடும்.
75/4=19முட்டை 1 நாள்.
19முட்டை*120 நாள= 2250. 2220*10ரூபாய்=22200₹
45000+7000+22200=742200.₹
இதில் அசையா சொத்து குறிப்பிடவில்லை. உணவு செவவிடும் தொகை குறிப்பிடவில்லை .ரேசன் zபொருள்.,அசோலா, கரையான்,புல் இவற்றை கொண்டு வளர்க்கலாம்.தடூப்பூசீ 700₹
1000 முதலீடூ 74200.மாற்ற முடியும் ஒரு வருடம் முடிவில்.அதவாது 7420% இலாபம்.
இது சாத்தியமா. முடியும் என்று களத்தில் குதிதத்து உள்ளோன்.
முட்டையின் விலை நாளுக்கு நாள் வித்தியாசம் ஆகும் ..

#TkpFarms
#Iniyan
www.nattukozhifarms.in
www.facebook.com/tk.pannai
#nattu kozhi valarpu

#nattukozhivalarputamilnadu

குடற்புழு நீக்கம் செய்தல்

குடற்புழு நீக்கம் செய்தல்
ஆர்டுபி / ஆர்டிவிகே தடுப்பு மருந்து கொடுப்பதற்கு ஒரு வாரம் முன்பிருந்தே குடற்புழு நீக்க மருந்து அளிக்கவேண்டும். பின்பு 3 வார இடைவெளியில் 18வது வாரத்தில் 4 முறை குடற்புழு நீக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். உருளைப் புழுக்களுக்கு எதிராக பைப்பரசின் பொருட்கள், ஆல்பென்ஸோல், மெபென்ட்சோல் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். அதே போல் நிக்ளோசமைடு, பிராசிகுவின்டால், ஆல்பென்டசோல் போன்றவை நாடாப்புழுக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றன.
குடற்புழு மருந்தை குடிநீர் வழியே கொடுக்கும் போது குறிப்பிட்ட அளவு மருந்தை குஞ்சுகள் 4 மணி நேரத்தில் குடிக்கும் நீர் அளவில் கலந்து கொடுக்கலாம். அதாவது 6 வார வயதுள்ள 100 குஞ்சுகளுக்கு ஒரு நாளைக்கு 6 லிட்டர் நீரில் கலந்து வைக்கலாம். மருந்து கலந்த நீரை முற்றிலுமாகக் கோழிகள் அருந்திய பிறகே மீண்டும் நீர் வைக்கவேண்டும்.

#TkpFarms
#Iniyan
www.nattukozhifarms.in
www.facebook.com/tk.pannai
#nattu kozhi valarpu
#nattukozhivalarputamilnadu


நாட்டுகோழிகளின் நோய்த்தடுப்பு மேலாண்மை

நாட்டுகோழிகளின் நோய்த்தடுப்பு மேலாண்மை
1) இராணிகெட் நோய் (வெள்ளை கழிச்சல்)
2) அம்மை நோய்
3) கோழி காலரா
4) சளி நோய்
5) ரத்த கழிச்சல் மற்றும் மஞ்சள் – ஈரல் நோய்
6) தலை வீக்க நோய்
7) ஒட்டுண்ணி பாதிப்புக்கள்

கோழிகளை தாக்கும் நோய்களில் வெள்ளை கழிச்சல் நோய் மிகவும் முக்கியமானது.இந்த நோய் கோழிகளை கோடை கால மற்றும் குளிர்கால பருவ மாற்றத்தின்போது அதிகமாக பாதிக்கும் இதை கொக்கு நோய் என்றும் கூறலாம். இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகளின் குடலும் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகள் தீவனம் எடுக்காது தண்ணீர் குடிக்காது வெள்ளையாகவும் பச்சையாகவும் கழியும் எச்சம் இடும் பொது ஒரு காலை தூக்கிகொல்லும் ஒரு இறக்கை மட்டும் செயல் இழந்து தொங்கும் தலையை முறுக்கி கொள்ளும் இறந்த கோழிகளை பரிசோதனை செய்து பார்த்தால் இரைப்பையில் ரத்த கசிவு இருக்கும். வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுக்க தடுப்பூசி அவசியம் போட வேண்டும்
கோழி அம்மை நோய் இந்த நோய் பாதித்த கோழிகளில் முதலில் சிறு சிறு அம்மை கொப்புளங்கள் கண் கொண்டை நாசிபகுதி செவி மடல் போன்ற இடங்களில் காணபடுகிறது .பின்பு கொப்புளங்கள் ஏற்பட்ட இடங்களில் வடுக்கள் தென்படும். வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் புண்கள் ஏற்படுவதால் தீவனம் உற்கொள்ள முடியாமல் கோழி இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.இந்நோயை ஆறு வார வயதில் கோழி அம்மை தடுப்பு ஊசி போட்டு கட்டுபடுத்தலாம்.
7 வது நாள் முட்டைக் கோழிகள் ஆர் டி வி எப் 1 என்னும் இராணிகெட் நோய் தடுப்பு மருந்தினை கண்ணில் மற்றும் மூக்கில் 2 சொட்டுகள் கொடுக்க வேண்டும்
14 வது நாள் ஐ பி டி தடுப்பு மருந்தை கண் சொட்டு மருந்தாக கொடுக்க வேண்டும்
3- வது வாரம் லசோட்டா என்னும் இராணிகெட் நோய் நோய் தடுப்பு மருந்தினை கண் சொட்டு மருந்தாக உபயோகிக்க வேண்டும்
5- வது வாரம் மீண்டும் லசோட்டா மருந்தினை கொடுக்க வேண்டும் 6- வது வாரம் கோழி அம்மை தடுப்பூசி இறக்கையில் தோலுக்கு அடியில்(0.5 மில்லி) செலுத்த வேண்டும்
8- வது வாரம் ஆர் டி வி கே / ஆர் பி என்னும் நோய் இராணிகெட் நோய் தடுப்பூசியை இறக்கையில் தோலுக்கு அடியில் மில்லி செலுத்த வேண்டும்
18- வது வாரம் இராணிகெட் நோய் (ஆர் டி வி கே) நோய்க்கான தடுப்பூசியை மீண்டும் செலுத்த வேண்டும்
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடி தண்ணிரில் லசோட்டா மருந்தினை கலந்து வைக்க வேண்டும். லசோட்டா கொடுப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் குடற்புழு நீக்கம் செய்தல் வேண்டும் .
குறிப்பு:
தீவனம் அல்லது தண்ணீரில் வைட்டமின் கலவை மருந்துடன் சிறிது சுன்னாம்புதூள் கலந்து கொடுப்பதன் மூலம், முட்டைகளின் எண்ணிக்கைகளை அதிகரிப்பதுடன், தோல் முட்டை இடுவதையும் தடுக்கலாம்.

#TkpFarms
#Iniyan
www.nattukozhifarms.in
www.facebook.com/tk.pannai
#nattu kozhi valarpu
#nattukozhivalarputamilnadu